டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு; கதறி அழுத பெற்றோர் - திருப்பத்தூர் அருகே சோகம்

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு! கதறி அழுத பெற்றோர்

Continues below advertisement
திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் உதயகுமார், மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு  கவியரசு(9) மகனும் சொல்மதி(7)  மகளும் உள்ளனர். 
 
இந்த நிலையில் கதிரம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் கவியரசு 5ஆம் வகுப்பும் சொல்மதி 2 ஆம் வகுப்பும் படித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
 
அதனை தொடர்ந்து பெற்றோர் கவியரசை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ சோதனை மேற்கொண்டதில் சிறுவன் கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்தார்.
 
அதனைத் தொடர்ந்து சிறுவன் கவியரசை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கவியரசு உயிரிழந்தார்.
 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொம்மிகுப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் கொட்டிவைக்கப்பட்ட குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யாமல் குப்பைகழிவுகளை தேக்கி வைத்ததாலே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே பஞ்சாயத்து நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
மேலும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola