கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை அறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 119 அடியாக உள்ள நிலையில் இந்த அணையில் மொத்தம் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரம் 52 அடியாக உள்ள நிலையில் 51 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.   



இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் நேற்றிரவு நேரடியாக சாத்தனூர் அணையை அடைந்தது. தற்போது சாத்தனூர் அணைக்கு 637 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 1892 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 84 அடி வரை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்



தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை இருந்தது தினந்தோறும் மழையின் அளவானது  அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 130 மி.மீ.,  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 2.0 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் அதன்படி போன்ற பகுதிகளின் வழியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.