IT Raid : அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திருவண்ணாமலையில் உள்ள அருணை கட்டுமான நிறுவனத்தில் அருணை வெங்கட் என்பவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

Continues below advertisement

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தென் மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 வேன்களில் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 6 மணிக்கு அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

மேலும் நூறுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்போடு 24 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி பள்ளிகளுக்கு செல்லக்கூடிய வேலையாட்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்லும் போது பலத்த துணை ராணுவத்தினர் சோதனையின் பிறகே அனுமதிக்கப்படுகிறனர்.


 

அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வின் மனைவி ஜீவா வேலு, மகன்கள் எ.வ.குமரன், எ.வ.கம்பன் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மத்தளம் குளம் தெரு பகுதியில் அமைச்சருக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இந்த அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தார் சாலை காண்ட்ராக்ட், கட்டுமான பணிகள், கால்வாய் போன்றவை மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை எடுத்து செய்து வருகிறார்.


 

மேலும் அருணை கட்டுமான நிறுவனத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு இல்லாமல் திருவண்ணாமலை நகரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருகின்றனர். காலைமுதல் அருணை கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.

தற்போது திருவண்ணாமலையில் இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆவார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola