நிலப்பிரச்னை.. மகளுக்கே குறி வைத்த தந்தை.. திரைப்படத்தை மிஞ்சும் கொலைத் திட்டம்!
ராஜா தனது சொத்தை தந்து சொந்த மருமகனே வாங்கி விட்டாரே என்று ஆத்திரத்தில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது
Continues below advertisement

ஜெலட்டின் குச்சிகள்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு ( வயது 53 ) இவருடைய மகன் நரசிம்மன் (30) மாமரம் விதைகளை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜா (60) இவருக்கு இரண்டு மனைவி முதல் மனைவி மங்கைக்கு , நந்தினி (30 ) , யுவராஜா (28) மற்றும் கார்த்திக் (24) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி வளர்மதி , இவருக்கும் அனிதா (27) அகிலா(24) அஜித் (24) என மூன்று பிள்ளைகள் உள்ளனர் . ராஜாவின் இரண்டாவது மனைவி மகளான அனிதாவை நரசிம்மன் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
ராஜா தனக்குச் சொந்தமான சொத்தை சில வருடங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு விற்றுவிட்டார் . அதனைப் பெரியசாமி என்ற நபரிடமிருந்து நரசிம்மன் நான்காவது நபராக 45 லட்சத்திற்கு வாங்கி உள்ளார்.
இதனால் ராஜா தனது சொத்தை தந்து சொந்த மருமகனே வாங்கி விட்டாரே என்று ஆத்திரத்தில் நரசிம்மன் மற்றும் அவரது மகளான அனிதாவிடம் , அந்த சொத்தை மீண்டும் தனது பெயரில் எழுதி வைக்கக் கோரி பல முறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .
அதனைத் தொடர்ந்து இன்று தனது மருமகன் மற்றும் மகள் என்றும் பாராமல் நரசிம்மன் குடும்பத்தை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்த ராஜாவின் முதல் மனைவியின் மகன்களான யுவராஜா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரின் ஒத்தழைப்பின் பேரில் , நரசிம்மன் வீட்டில் சுமார் 20 (ஜெலட்டிங்குகிகள் ) நாட்டு வெடிகுண்டை வைத்து தகர்க்க முடிவு செய்து , அவரது வீட்டின் சமையலறையின் மேல் கட்டிவைத்து விட்டு சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்ஷன் கொடுக்க முயற்சி செய்துள்ளார் .
அப்போது விடியற்காலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த சேட்டு ஏதோ சத்தம் கேட்பது அறிந்து வெளியே சென்று பார்த்துள்ளார் அப்பொழுது கார்த்திக் மற்றும் யுவராஜா சமையலறையில் நாட்டு வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இருந்தனர் , அப்பொழுது சேட்டு வருவதைப் பார்த்து இருவரும் கீழே குதித்துத் தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மின் கம்பத்தில் கனகேஷன் கொடுக்க தயார் நிலையில் வைத்திருந்த ஒயரை துண்டித்து விட்டு இருவரையும் சேட்டு துரத்திச் சென்று உள்ளார் . பின்னர் கந்திலி போலீசாருக்கு இந்த பயங்கர சம்பவம் தொர்பாக சேட்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி போலீசார் சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டைப் பாதுகாப்பாக மீட்டு எடுத்துக்கொண்டு ராஜா , யுவராஜா மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சொத்து பிரச்சனை காரணமாக தன் சொந்த மருமகனையே நாட்டு வெடிகுண்டு வைத்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர் .
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.