திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கோட்டை வீதி அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. மேலும் கடையை ஆக்கிரமிப்பு செய்யபட்டதாக சின்னகண்ணன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல சின்னகண்ணன் மீது தங்களை தரைக்குறைவாக பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் புகார் தெரிவித்தனர்.  இருதரப்பினர் ஆரணி நகர காவல்நிலையத்தில் பரஸ்பர புகார் அளித்துள்ளனர்.


 




மேலும் இதில் இருதரப்பினரையும் கடந்த 2-ம் தேதி ஆரணி நகர காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி திருவண்ணாமலை மாவட்ட  செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் விசாரணையின் போது  நகர காவல் நிலைய துணை ஆய்வாளர்  கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை பார்த்து நீ எஸ்.சி (தாழ்த்தபட்டவர்) தானே என்றும் மற்றொரு அதிகாரியான காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் என்பவரை ஓருமையில் மிரட்டல் தோனியில் விசாரணையின் போது பேசும் வீடியோ 5 நாட்களாக சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகிய தலைமையில்  சுமார்  500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆரணி நகர் முழுவதும் குவிக்கப்பட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் அதிகாலை அவர்களது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.


 




பின்னர் கைது செய்து இருவர் மீதும்   5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி மாஜிஸ்ட்ரேட் வீட்டில் ஆஜர் படுத்தி அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் பொழுது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் வாகனத்தை மறித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.  அப்பொழுது ஆரணி மாஜிஸ்ரேட் வீட்டிலிருந்து காவல்துறையினர் வாகனத்தை ஒரு மணி நேரமாக நகர முடியாமல் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணியில் இச்சம்பவம் குறித்து 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.