கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் 1223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய மலைகள் சிறு குன்றுகள் அடங்கிய கம்பள புரா -ஹரகலதேவி வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தனமர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயங்களுடன் மூவரை பிடித்தனர், மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்நாடு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (28) மல்லப்பா வயது  (58) கிருஷ்ணா (28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.



இவர்கள் அனைவரும் சுமார் 12 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஆக மலைப்பகுதியில் வந்து தங்கி இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்திய விவரம் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் வனத் துறையினா் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில்  அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி கிராமத்தை தேர்ந்தவர் மற்றும் பா்கூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது  இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.



அதனைத்தொடர்ந்து , கா்நாடக மாநிலம், தும்கூா் வன சரகத்தைச் சோ்ந்த வனச் சரகா் துக்கப்பா, குப்பு காவல் நிலைய ஆய்வாளா் நடாப் ஆகியோா் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புகாட்டு பகுதியில் முகாமிட்டுள்ளனா். இந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் , வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல்நத்தம் கிராமம் இருளா் காலனியிலும், பா்கூரிலும் விசாரணை மேற்கொண்டனா்.


இந்த விசாரணையில் உண்டியல்நத்தம் இருளா் காலனியை சேர்ந்த 5 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  பா்கூர்  காவல் நிலையத்திற்கு உள்பட இருளர் இனத்தை சேர்ந்த  தேவன் (38), தினேஷ்குமார் (28) , முனியப்பன் (30), பச்சைப்பன் (35) ஆகிய 4 நபர்களை கைது செய்து அவா்களிடம் தொடா்ந்து கர்நாடக காவல்துறையினர்  விசாரணை நடத்தி  வருகின்றனா். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 7 நபர்களை  கைது செய்து தொடர்ந்து கர்நாடக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்