திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பட்டா, இடம், சான்றிதழ், போன்ற பல்வேறு பிரச்னைகளை குறைத்து மனு அளித்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம்,  லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி - இவரது கணவர் செல்வகுமார். இவர்களுக்கு அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார். இதே போல் சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரிந்து வரும் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்.




இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தினி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை வேகமாக எடுத்து அவர், ‘என் பணத்தை மீட்டு தாருங்கள்” என்று அழுதபடி மேலே ஊற்றிக் கொண்டார். இதனை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடியிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். தனது மனைவியின் பெரியம்மாவுடைய சம்மதத்தோடு கொஞ்சம் சொத்தை எழுதி வாங்க வாரிசு சான்றிதழுக்கு சென்று தற்போது கையில் இருந்த மொத்த பணம், நகையை விட்டுவிட்டு நிற்பதாக அவரது கணவர் வேதனை தெரிவித்தார். வாரிசு சான்றிதழ் வாங்கி தருவதாக சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் இணைந்து 8 லட்சம் ரூபாயை ஏமாற்றியதால் விரக்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த பெண் , காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண