Co-Optex: ஏற்றுமதி ரகங்கள் ஏராளம்.. ரூபாய் 30 லட்சம் விற்பனையே இலக்கு.. திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்!

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் விற்பனையை தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறை நாடு புடவைகள், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்ட்,லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செக் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


திருச்சி பொதிகை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கடந்த ஆண்டு 13.80 லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த ஆண்டு 30.00 லட்சங்களை விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் , கோ-ஆப் டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் விருந்து பெறப்பட்டு 12ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்தம் முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடி உடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் கைத்தறி துறை ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் வடிவ வடிவமைப்பு மற்றும் உற்பத்தி( கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், அரசு அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  கோ-ஆப்டெக்ஸில் துணிகளை வாங்கி பயன்பெறவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola