Just In





அடுத்த பெருமை... சாதனைப் படைக்கிறது திருச்சி: என்ன விஷயம் தெரியுங்களா?
திருச்சி விமான நிலையம், 2024ம் ஆண்டில் ACI அமைப்பின் தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதில் முதல் இடத்தை கோவா, இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ளன.

வளர்ச்சியை நோக்கி கிடுகிடுவென்று திருச்சிராப்பள்ளி உயர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம், ஐடி பார்க், புட் கோர்ட் என்று சென்னைக்கு நிகராக திருச்சி வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் விமானப்பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்து போய் உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?
திருச்சி விமான நிலையம், 2024ம் ஆண்டில் ACI அமைப்பின் தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதில் முதல் இடத்தை கோவா, இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ள நிலையில், திருச்சி விமான நிலையம் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ACI அமைப்பின் தரவரிசையில் மூன்றாம் இடம்
விமான நிலையங்களின் சேவையை மதிப்பிடும் ASQ விருது 2024-ல் இந்த சாதனை கிடைத்துள்ளது. இந்தியாவின் விமான நிலைய ஆணையம் (AAI) இதை நடத்தியது. கோவா முதலிடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பிடித்தன. AAI அமைப்பின் 30-வது ஆண்டு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் AAI தலைவர் விபின் குமார் இந்த விருதை வழங்கினார்.
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம் 4.89 / 5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது. கோவா 4.92 புள்ளிகளும், சென்னை 4.91 புள்ளிகளும் பெற்றன. திருச்சி மற்றும் வாரணாசி விமான நிலையங்கள் சமமான புள்ளிகள் பெற்றிருந்தாலும், 2023-ல் பெற்ற அதே தரத்தை திருச்சி தக்கவைத்ததால் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.
எப்படி பட்டியலில் இடம் பிடிக்கின்றன
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் மூலம் AAI விமான நிலையங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இந்த கணக்கீடு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பயணிகளின் திருப்தியை மதிப்பிடுகிறது. இது ஒரு விமான நிலையத்தின் சர்வதேச தரத்தை உலக அளவில் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது.
விமான நிலையத்தின் ஒட்டுமொத்த சேவை தரம் 31 விதமான அம்சங்களை வைத்து கணக்கிடப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதாவது, விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிடைக்கும் வசதிகள், பாதுகாப்பு, ஊழியர்களின் சேவை போன்ற பல்வேறு விஷயங்களை வைத்து இந்த தரவரிசை முடிவு செய்யப்படுகிறது.
மேலும் தரம் உயரும்
திருச்சி விமான நிலையம் தொடர்ந்து நல்ல தரத்தை பேணி வருவதால் இந்த விருது கிடைத்துள்ளது. இது திருச்சிக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த விருது மூலம் திருச்சி விமான நிலையத்தின் தரம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி பஞ்சப்பூரில் அனைத்து வசதிகளும் நிரம்பிய புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதன் அருகிலேயே ஐடி பார்க் வருகிறது. இவ்வாறு திருச்சியின் நிறமே வானவில் போன்று மாற்றம் அடைந்து வருகிறது. தொழில் மற்றும் முன்னேற்றத்தில் திருச்சி கிடுகிடுவென்று வளர்ந்து வருகிறது. இதனால் சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாறி வருகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் பெரும்தம் கொள்கின்றனர். இந்நிலையில் விமான சேவையில் தரமான மூன்றாம் இடத்தை திருச்சிடி விமான நிலையம் பிடித்துள்ளது அனைத்து தரப்பு மக்களிடமும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.