திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாடு நடைபெற்றது.  இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜக கட்சியில் கூட்டணி இருக்க கூடிய அரசியல் கட்சி தலைவர் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்திய ஜனநாயக  கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் பேசியது.. ”நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வன விலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது. 




மேலும், வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆள மாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசியிருக்கின்றனர். அது நடக்க தான் போகிறது.  கடந்த 2014ல், குஜராத் முதல்வராக இருந்த போது, மோடியை எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது, இருவரும் பெற்ற தாயை பற்றித் தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள், என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. அவர் ஒரு தெய்வப்பிறவி, ஞானி, துறவி. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும், உயர்வு பெற்று இருக்கின்றனர். இந்தியாவின் பெயரை, புகழை உயர்த்துவதற்கு காரணமாக இருக்கும் மோடி, மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறார். தமிழகத்தின் செங்கோளை பார்லிமெண்டில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளோம். நாம் வாழும் தமிழ் பூமியில், பிரிவினையை மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையை எங்கு தான் கண்டுபிடித்தார்கள், என்று தெரியவில்லை. அவர்கள், அந்த வார்த்தையை சொல்லும் போது, நான் பெரிதும் புண்படுத்தப்படுகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், மது ஒழிக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில், மீண்டும் வெற்றி பெறுவதன் வாயிலாக அதை செய்வோம் என்று மேடையில் பேசினார். 




மேலும் என் தொகுதியின் மக்களின் கோரிக்கையை ஏற்று , மக்களுக்கு தேவையான ஒரு மேம்பாலத்தை கட்டி கொடுத்து அதன் அருகிலேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இந்த மாநாடு அருகே உள்ள  திருப்பட்டூர் என்ற பகுதி அருகிலே இருக்கிறது. அங்கே தான் பிரம்மா என்று சிலையாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த பிரம்மா என் தலையெழுத்தையும், உங்கள் தலையெழுத்தையும் ஏன் இந்தியாவில் தலையெழுத்தையும்,  ஏற்கனவே எழுதி விட்டு எப்படி நான் எழுதிய தலை எழுத்தை சரியாக தான் செய்ல்படுகிறார்களா  என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த பிரம்மா நம்மோடு இந்த மேடையில் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அதேபோன்றுதான் இந்தியாவின் மூன்றாவது முறையாக மீண்டும் மோடி ஆட்சி அமைப்பார் இந்திய மக்களுக்கு நல்லதையே செய்வார் என்று தெரிவித்தார்.