திருச்சி  அ.ம.மு.கவின் வடக்கு மாவட்டசெயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை  அ.ம.மு.க  பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 


தமிழக சட்டபேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இருந்து  நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இடையில்  இறைவனின் சிரிப்பு என்று சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த தினகரன் அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்  திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன், அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார். 




கொடுநாடு வழக்கு விசாரனை பொறுத்தவரை  மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். அதேபோல் கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசு தற்போது ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையற்றது. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும். ஆனால் அதை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா அவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம்  தொண்டர்களிடம் உரையாடிக்கொண்டு இருக்கிறார். எப்போது சசிகலா தொண்டர்களை  சந்திப்பார் என்கிற கேள்விக்கு ? சசிகலா அவர்கள்  தான் முடிவு செய்ய வேண்டும் என்றும்  அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார்.