தமிழ்நாட்டில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பதிவு செய்பவர்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும்,  தனி மனிதர்களை பற்றி தவறான விமர்சனம் செய்வது, போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுக்கு எதிராகவோ, அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர் எதிராக உண்மைக்கு புறம்பாகவும், வன்முறை தூண்டும் விதத்தில் தவரான தனிப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருச்சி மாவட்டம், ஆரோக்கியதாஸ் (வழக்கறிஞர்) என்பவர் கொடுத்த புகாரின்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தினைச் சேர்ந்த பிரவின்ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் என்பவர் SanghiPrince (@Sanghi Prince) என்ற X வலையதளம் பக்கத்தில் கடந்த  13.12.2023-ஆம் தேதி  #SecurityBranch happened in Loksabha you know why? Becuse of the irresponsible MPs like you were distributing 'Visitor passes via social media for publicity and without background verification. Take responsibility on this  #ParliamentAttack; don blame.@DrSenthil MDRD என்று தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் திரு.S.செந்தில்குமார் என்பவரை பற்றி அவரது புகைப்படத்தை போட்டு அதில் பிரவீன்ராஜ் என்பவர் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டுள்ளார்.


இதை பார்த்து @Niranjan2428 என்ற X அக்கவுண்ட் கொண்ட நிரன்ஜன் குமார் என்பவர் மேற்படி கண்டித்து மறுபதிவிட்டுள்ளார் என்பதையும், மேற்படி பதிவுகளை புகார்தார் பார்த்ததாகவும், தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில் குமார் என்பவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எதிரி பதிவிட்டுள்ளதாகவும், இந்த செய்தியானது அரசுக்கு எதிராகவும், உண்மைக்கு மாறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதியினை கெடுக்கும் நோக்கத்துடனும், உண்மைக்கு புறம்பான செய்தியினை சமூக வலைதளங்களில் பரப்பிய பிரவீன்ராஜ் மீது கொடுத்த புகார் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 33/23 ச.பி 504, 505(1)(b) IPC & 66 IT Act ன்படி பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபரை திருச்சி மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.