தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தல்; பாஜக பிரமுகர் அதிரடியாக கைது

தந்தை வாங்கிய கடனுக்காக மகனை பாஜக பிரமுகர் கடத்திய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (45). இவர் தனியாக தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சேகர் (42) என்பவர் இயக்குநராக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பணிபுரிந்து வந்த சேகர், பாண்டிச்சேரி பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஞானப்பிரகாசம், சுமார் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


 

இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த சேகர், நேற்று மாலை மணப்பாறைக்கு வெள்ளைநிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்துள்ளார். அப்போது கடையில் ஞானப்பிரகாசத்தின் மகன் எபினேசன் (22) என்பவர் மட்டுமே இருந்துள்ளார். எனவே பணத்திற்காக அந்த இளைஞரை கடத்தி சென்றுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். 

குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, ​​அதில் இளைஞர் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இளைஞரை மீட்கும் பணியில் போலீசார் முனைப்பு காட்டினர். தொடர்ந்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படையினர் செல்போன் சிக்னலை வைத்து சோதனையிட்டனர். அப்போது அந்த இளைஞர் கடத்தப்பட்ட இடம் தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த போலீசார், இளைஞரை பத்திரமாக மீட்டு கடத்திய நபர்களிடம் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாஜக நிர்வாகி சேகரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை வாங்கிய கடனுக்காக மகனை பாஜக பிரமுகர் கடத்திய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement