திருச்சியில் கோர விபத்து: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே திருவாசியில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த சிறுமி உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Continues below advertisement

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே திருவாசியில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த சிறுமி உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த மேலும் இரண்டு பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

இதுக்குறித்து காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்.. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதி சேர்ந்தவர்கள் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் கும்பகோணத்திற்கு வேனில் வந்தனர். வேன் வாத்தலை அருகே திருவாசி என்ற இடத்தில் வந்த போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி விறகு ஏற்றிச் சென்ற லாரி மீது , ஆம்னி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது கடுமையாக மோதியது .

 

 

இதில் வேனில் பயணம் செய்த ஒரு சிறுமி , ஒரு பெண், உள்ளிட்ட 6   பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணித்த இருவர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தினால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது .


மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விபத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தினார். உயிரிழந்த 6 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  போலீஸ் சார் அனுப்பி வைத்தனர். மேலும் இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola