தலைப்புச் செய்திகள்
- தமிழகம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவு - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ
- தமிழக சட்டசபை தேர்தலில் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை.
- வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு.
- பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்துள்ள நக்சல்கள். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு.
- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- கொரோனா அதிகமுள்ள மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு.
- சென்னையில் இன்று முதல் வீடு, வீடாக மீண்டும் காய்ச்சல் பரிசோதனை.
- 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
- 100 நபர்களுக்கு மேல் பணியாற்றும் மையங்களிலே தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு.
- மகாராஷ்ட்ராவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.
- குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு.
- தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்.
- பிரதமர் மோடி குறித்த சர்ச்சையான கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.
- பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.608 அதிகரிப்பு.
- 14வது ஐ.பி.எல். சீசன் நாளை தொடங்க உள்ளது