பெண் கல்வியை மேம்படுத்தவும் பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப் போக்கை கட்டுப்படுத்தவும் சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரிய திட்டமான பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் உணர்வோடும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திடும் நோக்கோடும் கல்வியில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் பொருட்டு 2001-ஆம் ஆண்டு மறு வடிவாக்கம் செய்யப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் சிறு குடும்ப முறையினை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது எனவும், இத்திட்டம் பெண் குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் அவர்கள் தங்களது தனித் திறமைகளை முழுமையாக உணர்ந்து சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிடவும் ஏதுவாக அமைந்துள்ளது.


திட்டம் 1:  ஒரு குழந்தையின் மீது ரூ.50000 வைப்பு நிதி பத்திரம்.
திட்டம் 2:  இரு குழந்தைகளுக்கு தலா ரூ.25000 வைப்பு நிதி பத்திரம்.


தேவையான சான்றுகள்:


பிறப்பு சான்று (மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்) பெற்றோரின் வயது சான்று, பிறப்பு சான்று, அரசு மருத்துவரின் சான்று (தாயின் வயது வரம்பு 40) குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை) வருமான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்) - ரூ 72 000-க்கு மிகாமல், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று இருப்பிட சான்று - வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் பெற்றோர் அவர்களது பெற்றோர்) 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


குறிப்பு: இரண்டாவது பெண் குழந்தையின் 3 வயதுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.