திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்படி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிபட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்னரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாபட்டு, சானானந்தல், புண்ணியந்தல், கஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி , சேரியந்தல் மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடு மங்கலம்  ஆகிய துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் இணைப்பு  இருக்காது என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 


கீழ்பெண்ணாத்தூர்


இதேபோல் கீழ்பெண்ணாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கீழ்பெண்ணாத்தூர், கருங்காலி குப்பம், கரிக்கலாம்பாடி, கனியம்பூண்டி, ஆண்டாளுர், மாணாவரம், ராயம்பேட்டை நெடுங்கம்பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூர், குன்னகுப்பம், வேடநத்தம், ராஜா தோப்பு, நாரியமங்கலம், எலந்தபுரம் வடை, வழுத்தளக்குப்பம், தள்ளாம்பாடி, கல் பூண்டி,. காணர்ணாம் பூண்டி, காட்டு சித்தாமூர், நல்லான் பிள்ளை பெற்றால், சோமாசிபாடி, கடம்பை , சோ காட்டுக்குளம், ஆரஞ்சு, காட்டு வேளாணந்தல், கழிக்குளம், சிங்காவரம், கெங்கனந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார். 


மங்கலம்


மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் மங்கலம், மாதலம் பாடி, ஐங்குணம், நுக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்த வாடி, எரும்புண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன்சூராபாத், அவலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. 


வந்தவாசி


வந்தவாசி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் வந்தவாசி டவுன் மற்றும் தெள்ளார், கீழ்புத்தூர், பொன்னூர், நடுங்குப்பம், கீழ்கொடுங்காலூர், மருதாடு, சென்னாவரம், எச்சூர், புரிசை, மாம்பட்டு, நல்லூர், ஓசூர், சத்தியவாடி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சரவண தங்கம் தெரிவித்துள்ளார். 


செய்யாறு


செய்யாறு சிருங்காட்டூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் செய்யாறு, திருவத்திபுரம், பெருங்காட்டூர், வாக்கடை , பெரும்பள்ளம், ராந்தம், செங்காடு கொருகை மற்றும் பல்லி  ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 


ஆரணி


ஆரணி டவுன் சைதாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதனால் ஆரணி டவுன், கொசப்பாளையம், பாலாஜி நகர், மில்லர்ஸ் ரோடு, அம்பேத்கார் நகர், கண்ணகி நகர், வெள்ளேரி ,எஸ்வி நகரம், சேவூர், ஈபி நகர், குன்னத்தூர் ,வெட்டியாந்துழுவோம், இரும்பேடு, அறியப்பாடி மற்றும் ஆரணி பாளையம், விஏகே நகர் காந்தி ரோடு, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.