திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2ஏ தேர்வுக்கு  வரும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட அறிவிப்பில்,


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) தொகுதி – II, IIA முதல்நிலை பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 507 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வும், 1,820 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான தேர்வு 14.09.2024 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 19.07.2024 கடைசி நாள் ஆகும். இத்தேர்வுப் பற்றிய முழு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் 08.06.2024 அன்று முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டும், 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.