மாநில அளவில் இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இளம் தலைமுறையினரிடையே கைத்தறி இரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்தவும், அவ்வப்போது மாறிவரும் நவீன சந்தையின் தேவையினை அறிந்து புதிய வாடிக்கையாளர்களை கவர ஏதுவாகவும், கைத்தறி இரகங்களில் புதுமையினை புகுத்தி விற்பனையினை அதிகரித்திடும் நோக்கிலும் மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வடிவமைப்பு நிறுவனங்கள் ஜவுளிதொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது.