தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மாபெரும் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பிஜி பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஐ.என்.டி.யு.சி மாநில செயல் தலைவர் பி. கதிர்வேல் விளக்க உரையாற்றினார் .
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உற்பத்தியை பெருக்கி வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதனை ஒரு சமூக பிரச்சனையாக கருதி அரசு சிந்திக்க வேண்டும். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை அரசு மூடியதால் மாவட்டம் முழுவதும் உள்ள 2000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் லாரி டிரைவர், கிளீனர், கடைநிலை ஊழியர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள்,குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள. அரசு இவற்றை கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்பட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உயர்ந்திட தமிழக அரசு விரைந்து உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை காலம் தாழ்த்தாது திறக்க அரசு ஆவணம் செய்ய இந்த கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
தென் மாவட்டங்களில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் இளைஞரிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருவதாலும் சாதிய வன்முறைகளுக்கு இந்த இளைஞர்கள் எளிதில் ஆட்பட்டு விடுவதாலும் சாதிய மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையின்படி தென் மாவட்டங்களில் சாதிய மாதல்களை தடுக்க வேண்டுமானால் இளைஞர்களை கவனத்தை நிலைப்படுத்த பல பெரிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்களும் சில ஜாதி அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்ற வேலையில் சமூக விரோதிகளுக்கு பயந்து புதிய தொழிற்சாலைகளை திறக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை நீதிமன்றத்தை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது ஆளுகின்ற அரசின் கையாலாக தனமாக உள்ளது. புதிய தொழிற்சாலையில் தொழில் தொடங்கவும், மூடிய தொழிற்சாலைகளை உடனே திறந்திடவும் மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட இந்த கருத்தரங்கம் பொறுப்புடன் வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய நாடு வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தேசத்தின் மீது விரோதம் கொண்ட அந்நிய சக்திகள் பெரும் பலம் கொண்ட தேச விரோத சக்திகள் தொழிற்சாலைகளை இயங்க விடாமல் இந்திய பொருளாதாரத்தை வளர விடாமல் தடுத்து வருகிறது. குளச்சல் துறைமுகம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, தாதுமணல், மதுரை, இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கிரானைட் தொழில்கள் தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சாலைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறந்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட இந்த கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்து பல தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளது. நிறுவனம் சில சதிகாரர்களால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள தாமிர தொழிற்சாலை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.