திருநெல்வேலி - நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற இருக்கின்றன.  எனவே இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.






அதன்படி 

 

1) திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

2) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 



 

3) ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

4) ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

5) ஏப்ரல் 29 அன்று கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.