நெல்லை டவுண் அருகே தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண்(வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தருண் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் உயிரிழந்து உள்ளார்.  தாய் மேரி தனியார் நிறுவனத்தில் பணி செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இதனை பார்த்த அவனது தாய் உள்ளே சென்று சிறுவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதனை கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இது தொடர்பாக டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே  செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கோபத்தில் மனமுடைந்து காணப்பட்ட தருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? அல்லது பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண