தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன் முருகன். கூலித்தொழிலாளியான முருகனுக்கு விருதுநகர் மாவட்டம் மேல்மறைநாடு கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணுடன் 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தநிலையில், முருகன் வேலைக்கு செல்லாமல் மது போதையிலே சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.


இதானால் முருகேஸ்வரிக்கும் முருகனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால்  ஆத்திரமடைந்த முருகேஸ்வரி தனது கணவர் முருகனை விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று ஆறு மாதங்கள் ஆனநிலையில் தனது மனைவியுடன் சேர்த்து வைக்க கூறி தந்தை கனேசனுடன் கூலித்தொழிலாளி முருகன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த முருகன் தனது தந்தையிடம் கணேசனிடம்ன் வழக்கம் போல தனது மனைவி முருகேஸ்வரியுடன் தன்னை சேர்த்து வைக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே கூலித் தொழிலாளி முருகன் அருகில் இருந்த அரிவாளால் தனது தந்தையை சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். மகன் வெட்டியதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கணேசனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கடும் வெட்டுக்காயத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கணேசன் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள முருகனை தேடி வருகின்றனர். மது போதையில் சொந்த தந்தையை மகனே அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.