தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாலியல் வன்கொடுமை குறித்து நடத்தப்பட்ட  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்த இரண்டு பள்ளி ஆசிரியர்கள் மீது அப்பகுதி பெற்றோர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.




இதனையடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெருமாள்கோவில் கிராம மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் அந்த ஆசிரியர்கள் மீது எந்த அளவிற்கு அந்த பகுதி பொதுமக்களும் பெற்றோர்களும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் டிசம்பர்  7 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது.



இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச என்னை தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்திலும் பேசி பேசுகின்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் பெருமாள்கோவில் அரசு பள்ளியில் விசாரணை செய்து தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 




புகாரின் பேரில் டிசம்பர் 24 ஆம் தேதி ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சமூக அறிவியல் ஆசிரியர் விருதுநகரை சேர்ந்த ராமராஜ்,(39) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள ஆல்பர்ட் வளவன் பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநிலை குறித்த ஆலோசனை வழங்கும் வழங்கும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெருமாள்கோவில் கிராம மக்கள் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பெருமாள்கோவில், மேலாய்க்குடி, பரமக்குடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.