தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, குளத்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் பனைத் தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.




ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை, அதாவது பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வரை பதநீர் சீசனாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையிலும், பதநீர் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பதநீர் உற்பத்தி நன்றாக இருப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




இதுகுறித்து ராயப்பன் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பதநீர் சீசன் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது பதநீர் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி நன்றாக இருக்கிறது. ஒரு தொழிலாளி சராசரியாக 10 பனை ஏறுகிறார். அதில் தலா 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டின் பதநீர் கிடைக்கிறது. பதநீர் ஒரு லிட்டர் ரூ.90 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதுபோல கருப்பட்டி விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ கருப்பட்டி ரூ.1,000 என்ற விலைக்கு தான் வியாபாரிகள் எடுத்தனர். தற்போது ரூ.2,000 வரை எடுக்கின்றனர். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.




பனைத் தொழில் தற்போது சரிவில் இருந்து கொஞ்சம் மீண்டு வருகிறது. பல கிராமங்களில் பட்டதாரி இளைஞர்கள் கூட பனைத் தொழிலை ஆர்வமுடன் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம், சிறுபாடு கிராமங்களில் படித்த இளைஞர்கள் பனைத் தொழில் செய்கின்றனர். இந்த உதவித் தொகையும் உண்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. பனையேறும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அது பனை தொழிலாளர்கள் சிரமமின்றி பனையில் இருந்து பதநீரை இறக்கும் வகையில் இருக்க வேண்டும்" என்றார்.




இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, "ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது .தவிர எலும்பிர்க்கு நல்ல வலுவை கொடுக்கும். பனைமரத்தில் பதநீர், நுங்கு, பனங்கருப்பட்டி பனங்கல்கண்டு, பணங்கிளங்கு, பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனங்கருப்பட்டி இருமல், சளி, நாள்பட்ட வியாதி, புகைச்சல், ஜீரண சக்தி என பல்வேறு நோய்களை தீர்க்க வல்லதாகும்.




அதேபோல் ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது. பனைமரத்தில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கல்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனைமரம் தமிழக அரசின் மரமாகும். தவிர பனைமரம் ஓடை, வரப்புகளில் நட்டினால் மண்அரிப்பு ஏற்படாமல் தடுக்கும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரம் இன்று கேட்பாரற்று அழிந்து வருகிறது. பனைமரங்களை  பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையேறும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பனை மரங்கள் பாதுகாக்க வேண்டும்” என்கிறார்.