கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே அதிவேகத்தில் வந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,  இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 





கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சார்ந்த இருவர் தக்கலை பகுதியில் உள்ள  தங்களது  சொந்தக்காரர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சித்திரங்கோடு பகுதியில் வைத்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில்  வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு  இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது.இதில் படுகாயம் அடைந்த இருவரை பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.விபத்து குறித்து கொட்டிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மேலும் படிக்க: Vandita Pandey IPS : காவல்துறையே அலறவிட்டவர் புதுக்கோட்டை எஸ்.பியாக நியமினம் - யார் இந்த வந்திதா பாண்டே?


மேலும் படிக்க: Malayalam Actor Arrest: சிறுமிகளிடம் அருவெறுப்பு செயல்... ‘கும்கி நடிகர்’ போக்சோவில் கைது!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண