புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப்பற்றிய கடந்த கால பணியிட அனுபவங்கள் தெரிந்தால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவது நிச்சயம்...!


இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் போன பெண் அதிகாரிகளில் வந்திதாவும் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த இந்த பெண் ஐபிஎஸ் தமிழக கேடரில் 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜைச் சார்ந்தவர். தமிழகத்தில் பல இடங்களில் பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரை பெற்ற இவர் தான் சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் கூட பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடப்பவர். 


இதனால் பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும் தன் நேர்மையிலும் இருந்து சிறிதும் விலகாமல் இருந்த வந்திதா உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட  சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களால் சிவகங்கை சிறுமி ஒருவர் பாலியல் வன்கிடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நேரடியாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதனை சட்டப்படி பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் கரூருக்கு மாற்றப்பட்டார். 






இதன்பின்2016  ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் பினாமி என கூறப்பட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் இருந்து ரூ.5 கோடி பணத்தை பறிமுதல் செய்த  நிலையில் அவரை கொல்ல முயற்சி நடந்ததாகவும், வந்திதா தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் பல தகவல்கள் வதந்தியாக பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது. 


உதவி காவல் கண்காணிப்பாளராக 2013-14 ஆம் ஆண்டுகளில் சிவகாசியிலும், 2014-15 ஆம் ஆண்டு சிவகங்கையிலும், பின்  2015-16 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக கரூரிலும் பணியாற்றினார். அதன்பின் 2016-17 ஆம் ஆண்டில் ராஜபாளையம் பட்டாலியனிலும், 2017-19 ஆண்டில் ஆவடி பட்டாலியனிலும், 2019-21 ஆம் ஆண்டில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பியாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண