நெல்லை பருத்திப்பாட்டை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மகாராஜன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் நல்லத்தாய்(15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில் தற்பொழுது நல்லத்தாய் சுயநினைவின்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் தனது மகள் இதுபோன்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவரது தந்தை மகாராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து மகாராஜன் கூறும்போது, எனது மகள் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளியில் வைத்து அவளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டது. வழக்கமாக தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பதால் நாங்களும் அலட்சியமாக விட்டு விட்டோம். நாளுக்கு நாள் உடல்நிலை மிக மோசமானதால் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை. இறுதியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது அவள் சுய நினைவில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறாள். ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு தான் எனது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அரசு எனது மகளை காப்பாற்றி தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து நல்லத்தாயின் சகோதரி கூறும் போது, எனது தங்கை என்னை விட நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தாள். கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு திடீரென அவள் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டாள். தற்போது தனது தங்கை மருத்துவமனையில் இருப்பதால் என்னால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை, எனது அப்பாவும் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பமே கடந்த 3 மாத காலமாக கஷ்டப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.  தொடர்ந்து இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், தந்தை, சகோதரி ஆகிய மூவரும்  நெல்லை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில் மாணவியின் இந்த பாதிப்பால் குடும்பமே மிகவும் பாதிக்கப்பட்டு கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். எனவே தமிழக முதல்வரும், ஆட்சியரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.    







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண