பால், தயிர், மோர் போன்ற உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு மேற்கண்ட பால் தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதிதிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு நாடு முழுவதும் எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட பால், மோர் ஆகியவற்றிற்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது. இருப்பினும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.




 


குறிப்பாக பால், தயிர், அரிசி, முட்டை போன்ற உணவு பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு தபால் நிலையம் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கழுத்தில் வடை மாலை அணிந்தபடியும், கையில் இட்லி சாம்பார் மற்றும் தயிர், உப்பு, முட்டை போன்ற உணவு பொருட்களை கையில் ஏந்திய படியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




மேலும் ஏழை எளிய மக்கள் உணவை பறிக்கும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக கண்டன கோஷம் எழுப்பிய நிலையில் அதனை வாபஸ் பெறவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இது குறித்து நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் பத்திரிக்கையாளர்களுககு அளித்த பேட்டியில், ஒன்றிய அரசு அரிசி தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்ங்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. ஏற்கனவே வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கும் 28% உலகிலேயே இல்லாத அளவில் உயர்த்தியுள்ளது. எனவே உணவு பொருளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்,  இல்லாவிட்டால் இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் வாழ்வை பாதுகாக்க போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண