திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்திற்குட்பட்ட ருக்மணி பாளையம் சாலையில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் மனைவி லதா என்பவர் தனது குடும்பத்தினருடன் தெரசாம்பாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 30 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் தெரசாம்பாள் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்து வந்ததாகாகவும், அவருக்கு வாரிசுகள் இல்லை என்றும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் நபர்கள் தங்கள் வீட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், இதற்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துணை போவதாகவும், மேலும் தங்கள் வீட்டிற்கு முன் சுற்றுச் கவர் எழுப்பி உள்ளதாகவும் கூறி திமுக கட்சி கொடி மற்றும் துண்டுடன் கண்ணீர் மல்க வந்து ஆட்சியர் அலுவலத்தில் மனு கொடுக்க வந்தனர். ஆட்சியர் அரசு அலுவல் காரணமாக வெளியில் சென்றிருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் மனு கொடுத்தனர்.
தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை - திமுக கொடியுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடும்பம்
கு.ராஜசேகர் | 19 Mar 2022 12:14 PM (IST)
எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
திமுக கொடியுடன் முற்றுகை
Published at: 19 Mar 2022 12:14 PM (IST)