உலக புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா

உலக புத்தக தினத்தின்  நோக்கம்,  படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே ஆகும், ஒரு புத்தகத்தை படித்து, ஒவ்வொரு நாளும் படிக்க நேரம் கிடைக்கும் என்று உறுதியளிக்கவும்.

Continues below advertisement
தஞ்சாவூர்: உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது.
 
உலக புத்தக தினம், 'உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்' என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமையை மேம்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. இது எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் புத்தகங்களைக் கொண்டாடும் நாள். 
 
உலக புத்தக தினம், இது சர்வதேச புத்தக தினம் என்றும் அழைக்கப்படுகிறது,  1995 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏப்ரல் 23 ஆம் தேதியை இந்த நாளைக் கொண்டாட அதிகாரப்பூர்வமாக நியமித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் புத்தகங்களைக் கொண்டாடவும், படிக்கவும் மக்கள் ஒன்று கூடுவார்கள்.
 
உலக புத்தக தினத்தின்  நோக்கம்,  படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே ஆகும், ஒரு புத்தகத்தை படித்து, ஒவ்வொரு நாளும் படிக்க நேரம் கிடைக்கும் என்று உறுதியளிக்கவும்.
 
இத்தகைய உலகப் புத்தக தினத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 
 
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், சி பி ஐ எம் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், ஐயூ எம் எல் மாவட்ட செயலாளர் ஜெயினுல்ஆபுதீன், கலை பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் குணசேகரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயலாளர் செந்தில்குமார், செல்வராஜ், களப்பிரன், விஜயகுமார், தஞ்சை மறை மாவட்ட சான்சிலர் சக்கரியாஸ், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ் வழி கல்வி இயக்கம் இளமுருகன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குருசாமி நன்றி கூறினார்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola