தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று தாறுமாறாக ஓடிய மினி பஸ் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தான். 15 பைக்குகள், கார், மின் கம்பம் ஆகியவை சேதமடைந்தன. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து மருத்துவக்கல்லூரி நோக்கி தனியார் மினிபஸ் ஒன்று நேற்று மதியம் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ்சை வல்லம் பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில் என்பவர் ஓட்டி வந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் சென்ற போது இந்த மினிபஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 15 பைக்குகள், ஸ்கூட்டர்கள், மின் கம்பம் மீதும், அடுத்து கார் மீதும் மோதி நின்றது. இதனால் இந்த வாகனங்கள் சேதமடைந்தன; மின் கம்பமும் சாய்ந்தது. மேலும், சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனும் பலத்த காயமடைந்தான். இவரை தவிர சிலர் லேசான காயமடைந்தனர்.
தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினிபஸ் மோதி 15 பைக்குகள் சேதம் - சிறுவன் காயம்
என்.நாகராஜன் | 01 Apr 2023 02:32 PM (IST)
அதிர்ஷ்டவசமாக நேற்று போக்குவரத்து இல்லாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இல்லாவிடில் பெரிய அளவில் விபத்து நடந்து இருக்கும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
சேதமடைந்த பைக்குகள்
Published at: 01 Apr 2023 02:32 PM (IST)