தஞ்சை அருகே கரம்பை பகுதியில் பாசன வாய்க்கால் கரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், அறுவடை நேரத்தில் டிராக்டர், உழவு இயந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை அருகே கரம்பை பகுதியில் 7ம் நம்பர் சக்கரா வாய்க்கால் ஓடுகிறது. இது சிவகாமிபுரம், கரம்பை, சீராளூர் வரை பாசன வாய்க்காலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாசன வாய்க்காலை நம்பி இப்பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாசன வாய்க்கால் கரை வழியேதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த கரையை பொதுப்பணித்துறையினர் சரியான முறையில் பராமரிக்காமலும், தார் சாலையாக மாற்றம் செய்யாமலும் உள்ளனர். இதனால் தற்போது இந்த சாலையின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இந்த கரையில் வழியேதான் அறுவடை இயந்திரங்கள், பைக்குகளில் உர மூட்டைகள், டிராக்டர்கள் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர்: சீரமைக்கப்படாத வாய்க்கால் கரை - கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை - விவசாயிகள் வேதனை
என்.நாகராஜன் | 08 Dec 2022 01:22 PM (IST)
அறுவடை நேரத்தில் டிராக்டர், உழவு இயந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தஞ்சை அருகே கரம்பை பகுதியில் ஓடும் 7ம் நம்பர் சக்கரா வாய்க்கால் கரை சேறும், சகதியுமாக உள்ளதை காணலாம்.
Published at: 08 Dec 2022 01:21 PM (IST)