தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் மண்சட்டி ஏந்தி பொதுமக்களிடம் யாசகம் பெறும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தயாளன், மாநில துணைச் செயலாளர் பாரதி, மாநில துணைப் பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவ கால பணியாளர்களாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு எடையிழப்பு எனக் கூறி லட்சகணக்கில் அபராதம் விதித்ததை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யாமல் எடை இழப்பு எனக்கூறி கொள்முதல் பணியாளர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் மீண்டும் பணிபுரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். இயக்கம் செய்யாத கொள்முதல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்தி யாசகம் பெறும் நூதன போராட்டம்
என்.நாகராஜன் | 10 Jan 2023 06:20 PM (IST)
நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யக்கோரி மண் சட்டி ஏந்தி யாசகம் பெறும் நூதன போராட்டம் தஞ்சையில் நடந்தது.
போராட்டம் செய்தவர்கள்
Published at: 10 Jan 2023 06:20 PM (IST)