மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க தஞ்சாவூர் கிளை தலைவர் பரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க, தஞ்சாவூர் கிளை சார்பில் தமிழக நீர்வள மேம்பாடு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலாளர் முரளி, இணை செயலாளர் அசோகன், பொருளாளர் வீரரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் சராசரி ஆண்டு மழை 925 மி.மீ., பெய்கிறது. இதனால், ஆண்டு ஒன்றுக்கு 2,500 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தேவை என்பது 1,260 டி.எம்.சி., மட்டுமே தான். இந்நிலையில், 100 நீர்த்தேக்கங்கள், 40 ஆயிரம் கண்மாய்கள் மூலம் நமக்கு 1,058 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. தற்போது கண்மாய்கள், நீர்தேக்கங்கள் வண்டல் படிந்து 20 சதவீதம் தூர்ந்து போய் உள்ளது. இதனால், 142 டி.எம்.சி., தண்ணீர் அதில் தேக்க முடியாமல், தண்ணீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால் 916 டி.எம்.சி., தான் கிடைக்கிறது.
மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது - மூத்த பொறியாளர் பரந்தாமன்
என்.நாகராஜன் | 29 Aug 2022 10:05 AM (IST)
மேகதாதுவில் அணை கட்டி விட்டால், 67 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வராது. அவர்கள் இஷ்டத்திற்கு தான் தண்ணீரை திறப்பார்கள்.
மூத்த பொறியாளர் பரந்தாமன்
Published at: 29 Aug 2022 10:05 AM (IST)