தஞ்சாவூா்: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் வரும் மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. அதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரளானோர் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில் ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம், பி.இளையராஜா, இ.சத்தியசீலன், ஏ.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநிலப் பொதுச்செயலாளர் அ.மலர்விழி சிறப்புரையாற்றினார். மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கி உள்ளவாறு 1-7-2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மார்ச் 5ம் தேதி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம்
என்.நாகராஜன் | 20 Feb 2023 01:54 PM (IST)
மார்ச் 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்.
ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு
Published at: 20 Feb 2023 01:54 PM (IST)