தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 33 இன வகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம் என்றால் மிகையில்லை. பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற விரிவான அடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவை சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை ஆகியவை ஆகும். தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழகம் வளாகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்டது. இங்கு நூற்றுக்கணக்கான பறவைகள் இனம் இருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்
என்.நாகராஜன் | 19 Jan 2024 04:52 PM (IST)
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழகம் வளாகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்டது. இங்கு நூற்றுக்கணக்கான பறவைகள் இனம் இருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பு பணி
Published at: 19 Jan 2024 04:52 PM (IST)