தஞ்சாவூா்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் மழைநீர் செல்லும்ட வாரியை ஒட்டிய பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பொதுக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் உள்ள மறியல், சிலோன் காலனி போன்றவற்றில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் மழைநீர் செல்லும் வாரியை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று திரண்டு தங்களுக்கு பட்டா வழங்க கேட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கொட்டகை அமைக்க தேவையான பல்வேறு பொருட்களுடன் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் வந்ததால் பரபரப்பு உருவானது. தொடர்ந்து அந்த இடத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் வல்லம் டிஎஸ்.பி., நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், தாசில்தார் சக்திவேல், வருவாய்த் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
என்.நாகராஜன் | 03 Feb 2023 05:40 PM (IST)
இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் வந்ததால் பரபரப்பு உருவானது.
சாலையில் திரண்ட பொதுமக்கள்
Published at: 03 Feb 2023 05:40 PM (IST)