தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான். தஞ்சை பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கடைகள் அகற்றப்பட்டன. இந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு கோயில் எதிரே வாகனம் நிறுத்தும் பகுதியில் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரிய கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவற்றை நிறுத்த இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.


இதனால் அங்கே இருந்த பொம்மை கடைகள் அனைத்தும் வியாபாரிகள் எதிர்ப்பை மீறி அகற்றப்பட்டன. இதனால் வியாபாரிகள் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் கடைகள் வைக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். தஞ்சை பர்மா பஜார் அருகிலும் சிவகங்கை பூங்கா அருகில் உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்திலும் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்த இடங்களில் கடைகள் அமைத்தால் வியாபாரத்திற்கு பயன் தராது என்பதால் பெரிய கோவில் அரு கிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர் பெரிய கோவில் மிருகவதை தடுப்பு சங்க அலுவலகம் இருந்த இடத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.


தஞ்சை பர்மா பஜார் அருகிலும், சிவகங்கை பூங்கா அருகில் உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்திலும் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த இடங்களில் கடைகள் அமைத்தால் வியாபாரத்திற்கு பயன் தராது என்பதால் பெரிய கோவில் அரு கிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

தஞ்சை எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான். தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.