தஞ்சை பூமாலை காதி கிராப்டில் சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைப்பு

பூமாலை வணிக வளாகத்தில் காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மற்றும் தீபாவளியை ஒட்டி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மற்றும் தீபாவளியை ஒட்டி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை ஒட்டி காதி கிராப்டில் சிறப்பு விற்பனை தொடங்கப்படும். அதேபோல் இந்தாண்டும் நேற்று காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக இந்த ஆண்டு ரூ.58 லட்சத்து 22 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனைக்கு கதர், பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதேபோல் உல்லனுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Continues below advertisement




விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, அலுவலக கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தெரசா மேரி, காதி கிராப்ட் மேலாளர் சாவித்திரி, மகளிர் திட்ட அலுவலர் சரவணபாண்டியன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கைத்தறித்துணி விற்பனையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். தமிழக நெசவாளர்கள் தரமான, அதேசமயம் விலை குறைந்த கதர் மற்றும் கைத்தறித் துணிகளை கண்கவரும் வடிவமைப்புடன் நெய்வதில் வல்லவர்கள். வர்த்தகப்போட்டி காரணமாக, பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது.




நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின்கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில், அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி விற்பனையாக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. மக்கள் கொடுக்கும் ஆதரவு நெசவாளர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

'கதரின் தலைநகர் திருப்பூர்' என்று, கடந்த 1925ல் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசும் போது குறிப்பிட்டார். கதர் என்பது வெறும் துணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கையாகவும், கருத்தாகவும் தேச மக்கள் மனதில் இன்னும் ஆழமாக ஊடுருவத்தான் வேண்டும். அப்போதுதான் கதர் நெசவாளர்களின் உழைப்பும், பெருமையும் தெரிய வரும். இதற்கு முழுமையாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு நல்கினால் கதர் விற்பனை இலக்கை தாண்டி செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola