மயிலாடுதுறையில் உள்ள மீனவ கிராமங்களில் 4ஆவது நாளாக தொடரும் பதற்றம்...!

இருகிராம மீனவர்களிடையே  கடலில் மோதல் ஏற்பட்டதையடுத்து 4 வது நாளாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

Continues below advertisement

தமிழகத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து இருதரப்பு மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தில் உள்ள 21 அம்சங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Continues below advertisement


அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலிசார் தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்து தடைசெய்யப்பட்ட வலைகள், படகில் பொருத்தப்பட்டிருந்த என்ஜினிங்கள், மீன்களை ஏற்றி செல்லும் லாரிகளை பறிமுதல் செய்தனர். 


அதனைத் தொடர்ந்து  மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலிசார் சரியான முறையில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் ஆத்திரமடைந்த  பூம்புகார், திருமுல்லைவாசல்  மீனவ கிராமத்தைச் சேர்ந்த  சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனை அறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் வானகிரி பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீன கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.


மேலும் வானகிரி மீனவகிராம கிராமத்தைச் சேர்ந்த  படகு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த கரையில் இருந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான மூன்று பைபர் படகுகளுக்கு தீ வைத்து எரித்து தப்பித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் இருதரப்பு மீனவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து இரண்டு கிராமங்களிடையே பதற்றம் நிலவுவதால் கலவர தடுப்பு வாகனங்கள் (வஜ்ரா) மற்றும் 300 க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்- 21ஆம் தேதி முதல் போராட்டம்

இந்நிலையில் நேற்று வானகிரி கிராம மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு கிராமங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவ கிராமங்கள் பங்கேற்றனர். அதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 64 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola