தஞ்சாவூரில் திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் தஞ்சை போலீசார் வழங்கினர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர். மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கரம்பயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பராமரிப்பு பணிகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டனர்.
இந்த நேரத்தில் கரம்பயம் துணை மின் நிலையத்தில் எந்திரங்களும் மின்மாற்றிகளும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள், தொழில்நுட்ப உதவியாளர் ராம்குமார், எந்திர பராமரிப்பு பணி மேற்பார்வையாளர் ராஜேந்திர விக்னேஷ் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள் கூறியதாவது:-;தஞ்சை மின் மானி சோதனை கூடத்துக்கு உட்பட்ட 70 துணை மின் நிலையங்களுக்கு மின் நிறுத்தம் செய்யும் தினத்தில் அந்தந்த துணை மின் நிலையத்தில் எந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக வருவோம்.
தொடர்ந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வோம். ஒரு துணை மின் நிலையத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் ஆய்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.