காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் நடைபெறுவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. 




இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நான்கு காவல்துறை ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை குவிக்கப்பட்டனர். ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதி, பார்சல் ஆபீஸ் பகுதி, மறையூர் ரயில்வே கேட் பகுதி, மாப்படுகை ரயில்வே கேட் பகுதி மற்றும் இருப்பு பாதையிலும்  பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.




மேலும், ரயில்வே காவல்துறையினர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் ஆகியோர் ரயில் நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோன்று ரயில் பெட்டிகளிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் இரண்டு புறங்களிலும் காவல்துறையினர் நிற்கவைக்கப்பட்டு வேறு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்  புறப்பட்டுச் சென்ற பின்னரும் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறை செய்து இதுவரை அமல்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் மன்றம் என்ற நிகழ்வை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மக்கள் மன்றம் நடத்தி மத்திய அரசு மீது குற்றப்பத்திரிக்கை  தாக்கல் செய்தனர். மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறு செய்து இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதையும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் ஐ.நா உடன்படிக்கைகளை மதிக்காமலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை குறைத்துக் கொண்டே வருவதையும், 




இவர்களுக்கான  இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பதை கண்டித்து  நடைபெற்ற மக்கள் மன்ற நடுவர்கள் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் உட்பட்ட தலைவர் கணேசன் ஆகியோரிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் மத்திய அரசு மீது வழக்கு தொடுத்து  வாதங்களை முன் வைத்தனர். வழக்கை மறுத்து வாதங்கள் வழக்காடினர். உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.