தஞ்சை மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 97 மி.மீ. மழை பெய்தது. இதனால், விளாங்குடி, புனவாசல், வில்லியநல்லூர், குழிமாத்தூர் உட்பட கிராமங்களில் நடவு செய்யப்பட்டு 40 நாள்களுக்கு உள்பட்ட நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளன. தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கிராமங்களில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்யும்போது, வயல்களில் தண்ணீர் வடியாமல், தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. கடந்த வாரங்களில் மழை பெய்தபோது நெற் பயிரை தண்ணீர் சூழ்ந்தது. பின்னர் விவசாயிகள் சேர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை அகற்றினர். இந்நிலையில் மீண்டும் மழை நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கபட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் மாணிக்கம், தண்டபாணி, அய்யாச்சாமி ஆகியோர் கூறியதாவது: தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 20,000 செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இந்நிலையில், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மிகவும் வேதனையாக உள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியாமல் நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திருவையாறில் கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - வேதனையில் தவிக்கும் விவசாயிகள்
என்.நாகராஜன் | 17 Dec 2022 11:47 AM (IST)
தஞ்சாவூர்: கடந்த 2 நாட்களுக்கு முன்பு விட்டு விட்டு பெய்த கனமழையால் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் நெற் பயிர்கள் மூழ்கின
விளாங்குடியில் பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற் பயிர்கள்
Published at: 16 Dec 2022 07:04 PM (IST)