நாகை: சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து வரும் 18ம் தேதி காத்திருப்பு போராட்டம்- விவசாயிகள் அறிவிப்பு
உரிய விலை மற்றும் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தையும் சிபிசிஎல் நிறுவனத்தையும் கண்டித்து காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு.
Continues below advertisement

நாகப்பட்டினம் விவசாயிகள் போராட்டம்
சிபிசிஎல் பொது நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு 2013 சட்டப்படி உரிய விலை மற்றும் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தையும்சிபிசிஎல் நிறுவனத்தையும் கண்டித்து வரும் 18ம் தேதி சிபிசிஎல் நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 690 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நில கொடுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், பனங்குடி பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் நலச்சங்க போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத சிபிசிஎல் நிர்வாகம் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வரும் 18ம் தேதி முதல் சிபிசிஎல் நிறுவன நுழைவாயில் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு சிபிசிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க செயலாளர் சக்திவேல், பொருளாளர் முருகேசன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Continues below advertisement
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Just In
Top 10 News Headlines: வரிக்கு டார்கெட் வச்ச டிரம்ப்! கேரள நர்ஸ்க்கு தூக்குத் தண்டனை - டாப் 10 செய்திகள்
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(10.07.25) 9 மணி முதல் 4 மணி வரை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு - காரணம் என்ன?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.