காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம்:


சேலம் மாநகரில், கலைஞர் சிலை திறப்புவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11-ம் தேதி சேலம் செல்கிறார்.


ஜூன் 11-ம் தேதி சேலம் செல்லும் முதல்வர், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி உருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


மேட்டூர் அணை திறப்பு:


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும்.  அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும். கடந்தாண்டு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்.