நம் நாட்டில் இருந்து கடத்தப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட சிலைகளை, இனிமேல் திருட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன் 3டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ரேடியோ அலைவரிசை நவீன கருவி பொருத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த ஓராண்டில் மட்டும் 187 புராதன சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மிக முக்கியமான சிலைகளை கைப்பற்றியுள்ளோம். 1962ம் ஆண்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகளை மீட்டுள்ளோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை எங்கு வைத்துள்ளனர் என தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிலைகளை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலையின் உண்மை தன்மையை ஆராய்ந்து அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகளை, எக்காலத்திலும் மீண்டும் யாரும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன், 3டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ரேடியோ அலைவரிசை நவீன கருவி பொருத்தி பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை இனி எப்போதும் திருட முடியாதபடி நடவடிக்கை; டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்
என்.நாகராஜன் | 17 Sep 2022 04:38 PM (IST)
ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை எங்கு வைத்துள்ளனர் என தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
டிஜிபி சைலேந்திர பாபு
Published at: 17 Sep 2022 04:38 PM (IST)