தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகர் கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தினர். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2- ம் தேதி உலகம் முழுவது உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. அன்று தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பின்னர் அவரவர் முன்னோர்களின் குடும்ப கல்லறைகளுக்குச் சென்று அங்கு மலர்களால் அலங்கரிப்பர். பின்னர் மெழுவர்த்தி ஏற்றி முன்னோர்களையும், குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைத்து வழிபடுவது வழக்கம்.
தஞ்சை மாவட்டத்தில் முன்னோர்களை நினைவு கூர்ந்து நடந்த கல்லறைத் திருநாள்
என்.நாகராஜன் | 02 Nov 2023 05:31 PM (IST)
மகர்நோன்புச்சாவடி, பள்ளியக்ரஹாரம், அம்மன்பேட்டை, திருவையாறு, வயலூர், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கல்லறை திருநாள்
NEXT PREV
Published at: 02 Nov 2023 05:31 PM (IST)