தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரவுசர் புத்தக உலகத்தில், உலகப் புத்தக தினம், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்கம் ஆகியவை நடந்தது. 

Continues below advertisement

தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.  பேராசிரியர் குட்டிமணி வரவேற்றார். குந்தவை நர்சிங் கல்லூரி நிர்வாக அலுவலர் பாஸ்கர் தலைமை வகித்தார். மன்னை நாராயணசாமி பிசியோதெரபி கல்லூரி துணை முதல்வர் அ.சதீஷ்குமார், படிப்பக உறுப்பினர் இரா. செந்தூரப் பாண்டியன், தஞ்சை வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தஞ்சை பிரவுசர் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ரிப்பன்  வெட்டி தொடக்கி வைத்தார். புத்தக கண்காட்சியில் 15 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் மே 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் இறையன்பு எழுதிய வை தலைமை கொள், பத்தாயிரம் மைல் பயணங்கள், சிம்மாசன சீக்ரெட்,  நந்தவனம், தோன்றியதன் சிந்தனைக்கு, வைகறை வாழ்த்துகள் தலைமை பண்புகள் புரிந்ததும் புரியாததும் உலகை உலுக்கிய வாசகங்கள், பெரியார் கொட்டிய போர் முரசு, பொன்னியின் செல்வம், திருமந்திரம், நெப்போலியன், ஹில்ஸ் திங் அண்ட் கிரோ ரிச் தி சீக்ரெட் பிரமஹம்சா யோகானந்தா ஆட்டோபயோகிராபி பாலகுமாரன் உடையார், வேர்கள், குழந்தைகளுக்கான ரெம்ப்ளிகேட் சேப்பியன்ஸ், ஆங்கிலம், தமிழ், அட்டாமிக் ஹாபிட்ஸ் கான்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா சொசைட்டி, கிரேட்டஸ்ட் ஹாரர் ஸ்டோரீஸ், மலாலா, ஆயுத எழுத்து, பகத்சிங், தொ.ப பரமசிவம், சுஜாதா, லட்சுமி உள்ளிட்ட அறிவியல் இலக்கியம் கலை சமூக அறிவியல் பண்பாடு இசை உள்ளிட்ட பல்வேறு வகையான நூல்கள் கிடைக்கும்.

Continues below advertisement

புலவர் மோகன் தாஸ்,  பிரவுசர் புத்தக நிலைய நிர்வாக இயக்குனர் ஒரத்தநாடு குணசேகரன், படிப்பக நிர்வாகி மாரிமுத்து, அழகு ராமகிருஷ்ணன், விஜயகுமார், உதய பிரகாஷ், ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரவுசர் புத்தக நிலைய உரிமையாளர் மணிமொழி நன்றி கூறினார்.