தஞ்சாவூர்: ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் நடந்து வரும் சாலை அகலப்படுத்தும் பணியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தி வெளியிட்ட ஏபிபி நாடு மற்றும் நடவடிக்கை எடுத்த ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.



தஞ்சை அருகே ராமநாதபுரம் சாலை வழியாக வண்ணாரப்பேட்டை, 8 கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் ஊருக்கு திரும்புகின்றனர். மேலும் இப்பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பைக்குகள், கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து இருந்தது. தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இது உள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும்.

இந்நிலையில் இந்த சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் ஒருபுறம் பள்ளம் பறிக்கப்பட்டு, அந்த மண் எதிர்புறத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒற்றையடிப்பாதை போல் இந்த சாலை மாறியுள்ளது. இந்த பள்ளம் பறிக்கப்பட்ட பகுதியில் மண் மூட்டைகள் மட்டும் வரிசையாக வைத்துள்ளனர். அதில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வெகு அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது எதிர்புறத்தில் இருந்து வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே பள்ளம் பறிக்கப்பட்ட பகுதியில் அதுகுறித்து எச்சரிக்கும் விதத்தில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தியை ஏபிபி நாடு வெளியிட்டது.

இதையடுத்து ராமநாதபுரம் ஊராட்சித் தலைவர் குழந்தையம்மாள் ரவிச்சந்திரன் இதுகுறித்து ஒப்பந்தாரரிடம் தகவல் தெரிவித்து ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தினார். இதையடுத்து சாலைப்பணிகள் நடந்து வரும் பகுதிகளில் மண் மூட்டைகள் மீது ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து செய்தி வெளியிட்ட ஏபிபி நடு நிர்வாகத்திற்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சித் தலைவருக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண